தஞ்சை: பந்தல் அமைப்பதற்கான பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் பந்தல் அமைப்பதற்கான பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. நாஞ்சிக்கோட்டை சாலை அருகே சண்முகா நகரில் திருமணம், பொதுக்கூட்டம்  உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அலங்கார பந்தல் அமைக்கும்  தனியார் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த பந்தலில் இருந்த நைலான் பொருட்களில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day