தஞ்சை: மாதா கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டையில் லூர்து மாதா கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைப்பெற்ற போட்டியில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடினர். அதன்படி முதலில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Night
Day