தஞ்சை: வாழையிலை உற்பத்தி குறித்து தோட்டக்கலை துறையினருக்கு பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தோட்டக்கலை அலுவலர்களுக்கு வாழை இலை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
திருச்சி அருகே போதாவூரிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு வாழை சாகுபடி குறித்து 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவையாறு அருகே வடுகக்குடியிலுள்ள மதியழகன் என்ற விவசாயியின் தோட்டத்தில் உத்தரபிரதேச மாநில முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள்  களப்பயிற்சி மேற்கொண்டனர். இதில், வாழை இலை உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குறித்து மதியழகன் விளக்கமளித்தார். 

Night
Day