தஞ்சை: 5 நாட்களிலேயே கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு போடப்பட்ட தார் சாலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் ஆத்திக்கோட்டை கிராமத்தில் போடப்பட்ட தார் சாலை 5 நாட்களிலேயே கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு இருப்பதாக குற்றம் சாட்டி எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆத்திகோட்டை கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மேல தெருவில் இருந்து மயானம் வரை சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் விரலால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் சாலை இருப்பதாக கூறி பெயர்ந்து வருவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் பதிவிட்டுள்ளளார். 

Night
Day