தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், வாதாட அவகாசம் கோரிய ராஜேஷ்தாஸ் தரப்பிற்கு வரும் 31ம் தேதி வரை கெடு விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தரப்பில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராஜேஷ்தாஸ் இன்று நேரில் ஆஜரானார். அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பில் வாதாட அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி பூர்ணிமா, வரும் 31ம் தேதி வரை கெடு விதித்து, அன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...