தந்தை பெரியார் 146-வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நாளை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

அஇஅதிமுக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதிக்காகப் பாடுபட்டவர், ஜாதி, மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தொர்ந்து போராடிய தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா இல்லத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெருமைக்குரிய நிகழ்வில் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் பயணிக்கும் கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்வதாக முகாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day