தனியார் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு விட்டுச் சென்ற சிறிது தூரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது. இதனால் வாகனத்தில் இருக்கக்கூடிய பெட்ரோலை குழாய் மூலம் எடுத்து சோதனை செய்த போது, பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, பழுதடைந்த வாகனங்களை சரி செய்து தரும்படி, பெட்ரோல் பங்க் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

Night
Day