தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில்  20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உட்பட 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  



Night
Day