தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

மேலும், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Night
Day