தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும், இறந்து போன வாக்காளர்களின் பெயர் நீக்கப்படாமல் இருப்பது குறித்து கவனத்தில் எடுத்து பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Night
Day