தமிழகத்தில் கனமழையால் கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கனமழையால் கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பெருமபாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோன்று பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் கனமழையால் கடந்த 5 நாட்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் மே.23ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Night
Day