தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மார்க், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை என அனைத்து வகையிலும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Night
Day