தமிழகத்தில் செப்.1 முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் 5 முதல் 150 ரூபாய் வரை உயரும் எனத் தெரிகிறது. தொடரும் சுங்கக்கட்டண உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Night
Day