தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் நாங்குநேரி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


குழந்தைகள் சிலம்பம் சுற்றி புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர்.

நாங்குநேரியில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் இடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக மக்கள் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது மக்கள் பயணம் எந்நாளும் தொடரும் என்று, உறுதிபட தெரிவித்தார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் சீர்குலைந்துவிட்டதாகவும், தமிழக மக்களை நாள்தோறும் திமுக அரசு கசக்கி பிழிந்து வருவதாகவும், சின்னம்மா குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்‍கப்பட்டது. 




Night
Day