தமிழகத்தில் புதிதாக 3 சுங்கச்சாவடிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகம்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. காரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக 55 ரூபாய் முதல் 370 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல், நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒருமுறை சென்று வர கட்டணமாக 60 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Night
Day