தமிழகத்தில் மக்களவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார். பதற்றமான வாக்குசாவடிக்களை கண்டறித்து அவற்றில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்கு பெட்டிகளை வைக்கும் இடங்களில் சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து இன்று தென்மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி உடனான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

Night
Day