தமிழகத்தில் +2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் - 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

Night
Day