தமிழகம் முழுவதும் வரும் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் வரும் 3-ம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் முகாம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காலை 7 முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் என்றும் பயணத்தில் இருப்போரின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day