தமிழக அரசின் அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என்றும் மக்கள் விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டப் பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியது மட்டுமின்றி, தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Night
Day