தமிழக அரசுக்கு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசாணை எண் 354 படி, ஊதியம் வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தமிழக அரசை  வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி டாக்டர் லட்சுமி நரசிம்மனின் நான்காவது நினைவேந்நதல் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மனம் இல்லை என்ற வேதனை அனைத்து மருத்துவர்கள் மனதிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  டாக்டர் லட்சுமி நரசிம்மனின் உயிர் தியாகத்துக்கு மதிப்பளித்தும்,  அரசாணை 354 க்கு முக்கியத்துவம் கொடுத்தும், அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day