தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றதால் பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொன்முடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை அடுத்து, பொன்முடி எம்.எல்.ஏ-வாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது. மேலும், அவரை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் பரிந்துரை கடிதம் எழுதினார். இதனிடையே ஆளுநர் ஏற்கனவே திட்டமிட்டபடி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொண்ட பின், நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day