தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்காமல் பிரச்சனை ஏற்பட்ட பின், கோவைக்கு 3 நாள் பயணமாக சென்றார். 

நேற்று மாலை சென்னை திரும்பிய ஆளுநர் ரவி, இன்று காலை ஏர் இண்டியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், வரும் வியாழனன்று இரவு சென்னை திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் நிலையில், ஆளுநரின் திடீர் பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day