தமிழக மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடரும்" - கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழையூத்து பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து சின்னம்மாவை வரவேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சி உரையாற்றினார். 

இந்நிலையில், அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர், காவல்துறையின் கெடுபிடிகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் புகார் செய்தனர். சுற்றுப் பயணத்தின் போது, சின்னம்மாவைப் பார்க்கவும், அவரது உரையைக் கேட்கவும், தாங்கள் மிகவும் ஆவலோடு வந்தால், காவல்துறையினர், தங்களை விரட்டுவதாகவும், சின்னம்மாவை பார்க்கவிடாமல் அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இதனையடுத்து, அனைத்து விதமான அனுமதிகளோடும்தான், தாங்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், காவல்துறையினர் தேவையில்லாத கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் சின்னம்மா தெரிவித்தார். 






Night
Day