தமிழக மீனவரின் உடல் தமிழகம் வருகை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையால் முட்டி மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு காலை நான்கு மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜூலை 31ஆம் தேதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து இலங்கை ரோந்து படகு ஒன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு  மீது மோதியதில் அந்த விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்துள்ளனர் 

கடலில் குதித்ததில் மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் மூக்கையா மற்றும் முத்து முனியாண்டி ஆகிய இரண்டு மீனவர்களும் சிறு காயத்துடன் இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளனர்  மேலும் ஒரு மீனவரான ராமச்சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day