தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 120வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனாரின் 120வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், தமிழில் நாளிதழுக்குரிய மொழிநடையை எளிய முறையில் வடிவமைத்து, உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனாரின் 120வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார், தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day