எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று, மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுந்தரராஜபுரம் குடியிருப்பு பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உணவு மற்றும் பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
இதனிடையே, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், தமிழ்ச்செல்வி தம்பதியர் தங்கள் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று, அந்தக் குழந்தைக்கு, ஜெயலலிதா என புரட்சித்தாய் சின்னம்மா பெயர் சூட்டினார். இதனையடுத்து புளியந்தோப்பு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.