தருமபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் சுமார் 24 லட்ச ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

தருமபுரி உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு 3 டன் முதல் 4 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகளவில் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.  வழக்கத்தைவிட நுகர்வோர் அதிகளவில் காய்கறிகள், பழங்களை வாங்கி சென்றதால் 47 டன் காய்கறிகள் சுமார் 24 லட்ச ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Night
Day