தருமபுரி: கூட்டுறவு நகர வங்கி லாக்கர் முன்பு அக்‍னி பூஜை - வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியின் லாக்‍கர் முன்பு அக்‍னி பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி கடை வீதி பகுதியில் கூட்டுறவு நகர வங்கி அமைந்துள்ளது. இங்குள்ள லாக்கர் முன்பு சுவாமி படம் வைத்து, குத்து விளக்கேற்றி அக்‍னி வளர்த்து பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாடிக்‍கையாளர்களின், பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் வைக்கக்கூடிய லாக்‍கர் முன்பு இதுபோன்று நெருப்பு மூட்டி பூஜை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்‍கையாளர்கள், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என்ற கோரிக்‍கை எழுந்துள்ளது. 

Night
Day