தருமபுரி: சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 
தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதனிடையே வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை சோகத்தூர் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். 

Night
Day