தருமபுரி: தார்சாலை போட வலியுறுத்தி மலைவாழ் பழங்குடியின மக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தார்சாலை போட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக தார்சாலை இல்லாமல் தவிக்கும் இம்மக்கள், அவசர நேரத்தில் மருத்துவமனைக்குக்கூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், பள்ளி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

varient
Night
Day