தருமபுரி: புகாரளிக்க வந்தவர்களை அடிக்க பாய்ந்த திமுக நகர்மன்ற தலைவரின் கணவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி நகராட்சியில் மனுஅளிக்க வந்த பொதுமக்களை ஒருமையில் பேசி மிரட்டிய திமுக நகராட்சி தலைவரின் கணவரின் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. வள்ளலார் திடல் அருகேயுள்ள இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஏலம் எடுத்தநிலையில், அங்கு தற்காலிக கட்டிடம் கட்ட நகராட்சி அலுவலகத்தில் அனுமதி அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை சந்தித்து முருகேசன் முறையிட்ட நிலையில், முருகேசனின் உறவினர்கள் நாகராட்சி அலுவலகத்தில் ஒப்புதல் பெற சென்றனர். அங்கிருந்த நகர்மன்ற தலைவர் லட்சுமியின் கணவர் நாட்டான் மாது, மாவட்ட செயலாளரிடம் ஏன் சென்றீர்கள் எனவும் யாரிடம் வேண்டுமானாலும் போய் கூறுங்கள் என மிரட்டும் தோனியில் பேசி, அடிப்பதற்கு பாய்ந்துள்ளார்.

Night
Day