தருமபுரி: பெண்ணின் வயிற்றிலிருந்து 6.8 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 6 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றிய மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மாரண்டஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி முரளியின் மனைவி சுதா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ஏற்கனவே குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் சுதா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்த பரிசோதனையில் அவருடைய வயிற்றில் பெரிய அளவிலான கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து கடந்த 26ம் தேதி சுதாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பாலக்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சுதாவின் வயிற்றில் இருந்து 6 கிலோ 840 கிராம் எடைகொண்ட கட்டியை முழுமையாக அகற்றி சாதனைபடைத்துள்ளனர்.

Night
Day