தருமபுரி: விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை மாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் வேடியப்பன் திட்டு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை திடீரென மாயமானதை அடுத்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை ஆண் யானை, வேடிப்பயப்பன் திட்டு அருகே உள்ள சனத்குமார் ஓடையில் 15 மணி நேரமாக முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சித்தனர். அப்போது ஏமக்குடியூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து மாயமான காட்டு யானையை, வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day