தருமபுரி: 40 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத கிராமம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தாரததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அரகாசனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீரப்பட்டி பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாக பேருந்து வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day