தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் வேடியூர் கிராமத்தில் புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேடியூர் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயற்சித்தனர். ஆனால் உள்ளே அனுமதிக்காததால், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Night
Day