தர்மபுரி: கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தர்மபுரி மாவட்டம் இட்லபட்டி கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரூரை அடுத்த இட்லபட்டி கிராமத்தில் 100 ஆண்டு காலமாக நத்தம் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் 25 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கிடவும், சுடுகாடு ஆக்கிரமிப்பினை அகற்றி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிராம மக்கள் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நான்காவது நாளாக பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்தும், பெண்கள் முதியவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day