தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா ரியல் எஸ்டேட் துறையின் ஆணையராக நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சார்ந்த முருகானந்தம் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசின் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். நெல்லை மாவட்ட சார் ஆட்சியராக பணியை தொடங்கிய முருகானந்தம் ஐஏஎஸ் அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றியவர் முருகானந்தம் ஐஏஎஸ், தற்போது தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக பதவியேற்றுள்ளார்.

Night
Day