தாமிரபரணி கழிவு நீரை குடத்தில் பிடித்து வந்த திமுக கவுன்சிலர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாநகராட்சி கூட்டத்துக்கு தாமிரபரணி கழிவு நீரை குடத்தில் பிடித்து கொண்டு வந்த திமுக கவுன்சிலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 6வது வார்டு திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் தாமிரபரணி ஆற்றில், கழிவுநீர் கலந்த தண்ணீரை குடத்தில் பிடித்து கொண்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பவுல்ராஜ், தாமிரபரணி ஆறு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் மிக அதிகமாக கலந்து வருவதால் தண்ணீரை குடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Night
Day