தாயகம் திரும்பிய 18 தமிழக மீனவர்கள் : சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த 18 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் 18 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 18 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து தனி வாகனம் மூலம் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Night
Day