தாருகாபுரத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டம்  வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாருகாபுரம் கிராமத்திற்கு சென்றபோது பொதுமக்களும், கழக தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

கழக நிர்வாகி  ஹரிஹரன் ஏற்பாட்டில் திரளான தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

மேள தாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சின்னம்மாவை வரவேற்றனர். 

சின்னம்மாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். ஆளுயுர மாலை  அணிவித்து கழக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

தாருகாபுரம் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை நாள்தோறும் ஏமாற்றி வருவதாகவும், தமிழக மக்களின் நலன் காக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

தாருகாபுரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா திருவுருவப்படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெண்களும், மூதாட்டிகளும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 
 



varient
Night
Day