தாழ்த்தப்பட்ட சமூகம் குறித்து இழிவாக பேசியாதாக தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாழ்த்தப்பட்ட சமூகம் குறித்து இழிவாக பேசியதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் அப்போதைய முதன்மை செயலாளர் சண்முகம், தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதிமாறன் பேசியிருந்தார். இதனால் தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கோவையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்து கோவை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தயாநிதிமாறன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day