திண்டிவனம் அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்த கண்காணிப்பு கேமரா ஒயர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா ஒயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் காசநோய் பிரிவின் ஜன்னலை ஒட்டி இருந்த ஒயரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கரும்புகையானது கண்ணாடி ஜன்னல் வழியாக காசநோய் பிரிவுக்கு சென்றதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மருத்துவமனை பணியாளர், மண்ணை கொட்டி தீயை அணைத்தார். இந்த தீ விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day