திண்டுக்கல்: அரசு நகர பேருந்து முன்பக்க டயரின் அடியில் சிக்கி பெண் பரிதாப பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கடந்த 29ம் தேதி பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுண்ட்ரோடு புதூரை சேர்ந்த மீரா என்பவர் கடந்த 29ம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலைய சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அரசு நகர பேருந்து மோதியது. இதில் மீரா பேருந்தின் முன் பக்க டயரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இதன் கண்காணிப்பு கேமரா வெளியாகி நெஞ்சை உலுக்கியது.

Night
Day