திண்டுக்கல்: இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதியதில் ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌசிக் பாலாஜி என்பவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இன்று காலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். சிலப்பாடி அருகே சென்றபோது அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதியதில், கௌசிக் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Night
Day