திண்டுக்கல்: இழப்பீடு கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமத்துப்பட்டி அருகே மதுரை ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2 வருடங்களாக  நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தருமத்துப்பட்டிக்கும் பன்றி மலைக்கும் இணைப்பு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இந்தப்பணிக்‍காக இங்கு வசிக்‍கும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் விளை நிலங்கள் மற்றும் வீடுகளை விட்டு செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தங்களுக்‍கு உரிய இழப்பீடு கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day