திண்டுக்கல்: கிரிக்கெட் விளையாட்டின்போது இருதரப்பினர்களுக்கு இடையே பயங்கர மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கிரிக்கெட் விளையாட்டின்போது இருதரப்பினர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சவேரியார் தெரு மற்றும் நந்தனார் தெருவை சேர்ந்த இளைஞர்கள், இரு பிரிவாக பிரிந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு இளைஞர்களும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த இரு தரப்பு இளைஞர்களின் உறவினர்களும் கட்டை உள்ளிட்டவைகளுடன் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day