திண்டுக்கல்: சாலையோரம் குப்பைகள் எரியூட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்‍கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலையோரம் குப்பைகள் எரிக்‍கப்பட்டதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்‍கி பொதுமக்‍களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்‍கு ஆளாகினர். எரியோடு பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குக்‍கு வெளியே சாலையோரம் குப்பைகளை கொட்டி பணியாளர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. சாலை முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்ததால், பொதுமக்‍களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியுற்றனர். எனவே குப்பைகளை சாலையோரம் எரிக்காமல் குப்பை கிடங்கிற்குள் ஒதுக்குப் புறமாக வைத்து எரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day