திண்டுக்கல்: தகாத உறவில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே தகாத உறவில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். புதுச்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கோவையை சேர்ந்த மற்றொரு நபருடன் திருமணமான நிலையில், தொடர்ந்து மணிகண்டனுடன் பேசி வந்துள்ளார். இதனிடையே வீட்டைவிட்டு வெளியேறிய தேன்மொழி மணிகண்டனுடன் சென்ற நிலையில், வித்தியாசத்திரம் அருகே இருவரும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Night
Day