திண்டுக்கல்: தனியார் நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழைய அப்பர் லேக் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனிடையே கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய பழைய அப்பர் லேக் வியூ பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தீ ஏற்பட்டு செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து வருகிறது. இதனை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஜிம்கானா மற்றும் பழைய அப்பர் லேக் பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Night
Day