திண்டுக்கல்: திமுக நகர செயலாளருக்கும், பேரூராட்சி மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், திமுக நகர செயலாளருக்கும், திமுக பேரூராட்சி மன்ற தலைவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில், திமுக, அஇஅதிமுக மற்றும் சுயேட்சை  கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படைவசதிகள் செய்யவில்லை என்றும் செலவின தொகைகளுக்கான ரசிது முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் 2வது வார்டு கவுன்சிலரும், திமுக நகரச் செயலாளருமான விஜயகுமார் தெரிவித்தார். இதனால், பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராஜ்க்கும், விஜயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Night
Day